வருபவர்க ளோலை கொண்டு நமனுடைய தூத ரென்று
மடிபிடிய தாக நின்று – தொடர்போது
மயலதுபொ லாத வம்பன் விரகுடைய னாகு மென்று
வசைகளுட னேதொ டர்ந்து – அடைவார்கள்
கருவியத னாலெ றிந்து சதைகள்தனை யேய ரிந்து
கரியபுன லேசொ ரிந்து – விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன் – முனமேதான்
பரகிரியு லாவு செந்தி மலையினுட னேயி டும்பன்
பழநிதனி லேயி ருந்த – குமரேசா
பதிகள் பல வாயி ரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காண வந்த – கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
யணிவர் சடை யாளர் தந்த – முருகோனே
அரகரசி வாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்த – பெருமாளே
பதம் பிரித்தது
தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த – தனதான
வருபவர்கள் ஓலை கொண்டு நமனுடைய தூதரென்று
மடிபிடிய தாக நின்று – தொடர்போது
மயலதுபொலாத வம்பன் விரகுடையனாகுமென்று
வசைகளுடனேதொடர்ந்து – அடைவார்கள்
கருவியதனாலெ றிந்து சதைகள்தனையே யரிந்து
கரியபுனலேசொ ரிந்து – விடவேதான்
கழுமுனையி லேயி ரென்று விடுமெனும் அ(வ்) வேளை கண்டு
கடுகிவர வேணு மெந்தன் – முனமேதான்
பரகிரியுலாவு செந்தி மலையினுடனே இடும்பன்
பழநிதனிலேயிருந்த – குமரேசா
பதிகள் பல வாயிரங்கள் மலைகள்வெகு கோடி நின்ற
பதமடியர் காண வந்த – கதிர்காமா
அரவுபிறை பூளை தும்பை விலுவமொடு தூர்வை கொன்றை
அணிவர் சடையாளர் தந்த – முருகோனே
அரகரசிவாய சம்பு குருபரகு மார நம்பு
மடியர்தமை யாள வந்த – பெருமாளே